Sunday, March 17, 2019

நாட்டில் கிட்டத்தட்ட 50 வீதமான போலி ஆவணங்கள் - இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம்

40 முதல் 50 வீதமான காணி உறுதிப்பத்திரங்கள் போலியானவை என கண்டறியப் பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரத் தகவலை
இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம் கண்டறிந்துள்ளது. மக்களின் அத்தியாவசிய உறுதிப்பத்திரங்களான பிறப்புச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களில் ஐந்தில் ஒன்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் என் சி விதானகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த போலியான பாத்திரங்கள் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பது வங்கிக்கடன்களை பெறுவது உள்ளிட்ட பல தேவைகளுக்காக தயாரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த போலி ஆவணங்களை கண்டறியும் மட்டும் முற்றாக இல்லாது ஒழிக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து காணி, பிறப்புச் சான்றிதழ்களை கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கணினி மயமாக்கும் நடவடிக்கை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

இதன்படி, பிறக்கும் குழந்தைகளுக்கு இலக்கமொன்று வழங்கப்படுவதுடன், அதனையே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பயன்படுத்துவதற்கும், தேசிய அடையாளஅட்டையை பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்படுத்தவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com