Monday, March 11, 2019

வாக்குறுதி வழங்கியபடி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் - அரசாங்க தரப்பு

தாம் வாக்குறுதி வழங்கியபடி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, விசேட கொடுப்பனவாக 50 ரூபாய் வழங்கப்படும் என, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இந்த விசேட கொடுப்பனவு எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல், பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அமைச்சரவைப் பத்திரம், அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக நவீன் திஸாநாயக்க கூறினார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் விசேட கொடுப்பனவுக்கான எந்த ஒதுக்கங்களும், அண்மையில் தயாரிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தில் இடம்பெறவில்லை.

எவ்வாறாயினும் தாம் வாக்குறுதி வழங்கியபடி 50 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என, அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விசேட கொடுப்பனவு, ஒரு வருடத்திற்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com