Sunday, March 17, 2019

மன்னார் புதைகுழி குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் 22 ஆம் திகதி எடுக்கப்படும் - சமிந்த ராஜபக்ச

இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மன்னார் மனித புதைகுழி விவகாரம், அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பெறப்பட்ட கார்பன் பரிசோதனை அறிக்கையின் பின்னர் சற்று, தணிந்துள்ளது. மேற்படி கார்பன் பரிசோதனையின் படி, அவை 1400ம் ஆண்டு முதல் 1650ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மரணித்தவர்களுடையது என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு விடயங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என, பல தொல்பொருள் ஆய்வாளர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கூறி வருகின்றனர்.

அத்துடன் குறித்த கார்பன் அறிக்கையானது மன்னார் மனித புதைகுழி விடயத்தில் இறுதி முடிவை மேற்கொள்வதற்கான ஒரு ஆவணமாக எந்த சந்தர்ப்பத்திலும் அமையாது என, சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 22ஆம் திகதி இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் என, சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அன்றைய தினமே தடயவியல் பரிசோதனைக் குழு ஒன்றும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும், மன்னார் நீதவானை சந்தித்து இதுதொடர்பான இறுதி முடிவை எடுக்கவுள்ளனர் என, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com