Wednesday, February 27, 2019

முல்லைத்தீவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி

முல்லைத்தீவு அம்பாள்புரம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.

அம்பாள்புரம் பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவர், வவுனிக்குளம் அலைகரை பகுதியில் சென்றவேளை கட்டுத்துவக்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான நல்லையா சதீஸ்குமார் என்று கண்டறியபட்டுள்ளது.

இந்த நிலையில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com