Monday, February 11, 2019

முறிகள் மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து நிதி இழப்பை மீள அறவிடும் வகையில் புதிய சட்ட திருத்தம்

முறிகள் மோசடியினூடாக இடம்பெற்ற 5.8 பில்லியன் ரூபா நிதி இழப்பை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து மீள அறவிடும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தயாராகியுள்ளதாக இலங்கையின் ஆங்கில ஊடகமான சண்டே டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகை, பதிவு பங்கு பரிவர்த்தனை கட்டளைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த திருத்தங்கள் தொடர்பில், கடந்த வௌ்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில், பதிவு மற்றும் பங்குப் பரிவர்த்தனை கட்டளைச் சட்டத்தின் 21/டீ/5 சரத்திலுள்ள பொறுப்பு என கூறப்படும் லியபிலிடி என்பதற்குப் பதிலாக நட்டம் எனப்படும் டமேஜஸ் என்ற பதத்தை இணைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டமாஅதிபர் திணைக்களம், மத்தி வங்கி மற்றும் திறைசேரியின் அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com