Friday, February 22, 2019

அரிசிக்கான நிர்ணய விலை தொடர்பான வர்த்தமானி ஏப்ரலில் வெளியாகும் - அமைச்சர் பி. ஹரிசன்

அரிசிக்கான நிர்ணய விலையை வெளியிட உள்ளதாக விவசாய, கிராமிய பொருளாதாரம் அமைச்சர் பி. ஹரிசன் அறிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதியுச்ச சில்லறை விலை ஏப்ரல் முதலாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படுமென அவர் கூறினார்.

நெற் செய்கையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த நிர்ணய விலை நிர்ணயிக்கப்படுவதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம், ஒரு கிலோ சம்பா அரிசிக்கு 85 ரூபாவையும், நாட்டரிசிக்கு 80 ரூபாவையும் அதியுச்ச சில்லறை விலையாக அறிவிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com