Monday, February 18, 2019

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக, மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம், மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம். குற்றவியல் சட்டங்களே போதும்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இதில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் பாதகத் தன்மைகள் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில், மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அமைப்பின் தலைவர் ச.சிவயோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன் கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் பல்சமய ஒன்றியம் உட்பட மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள், சர்வமதப் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, இணைச் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்றங்களில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான பிரேரணை கொண்டுவரப்பட்டு இச்சட்டத்தை எதிர்ப்பதற்கான வெளிப்படுத்தல்களை சர்வதேசத்திற்கும், அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த சட்டத்தின் பாதகத் தன்மைகளை உணர்ந்து இதனை நிராகரிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து சபைகளூடாகவும் மேற்கொள்வதற்கு. தமது தரப்பு தயாராகவே இருப்பதாகm மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com