Sunday, February 10, 2019

சேவை செய்யாமல் உள்ள அரசியல்வாதிகள், விரட்டி அடிக்கப்பட வேண்டும் - மனோ கணேசன்.

சேவை செய்யாமல் மக்களை ஏமாற்றி வரும் அரசியல்வாதிகளை அடித்து விரட்ட வேண்டும் என, அரச கரும மொழிகள், இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

நடமாடும் சேவை நிகழ்வொன்று இன்று, மாத்தளையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சர் மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம், மக்களது அரசாங்கம். இந்த அரசாங்கத்தினை மக்களே ஏற்படுத்தினார்கள். இந்த அரசாங்கத்திலில் அங்கத்தவர்களாக இருப்பவர்களையும், மக்களே தெரிவு செய்தார்கள்.

எனவே அவர்களுக்குச் சேவை செய்யவே நாம் கதிரையில் இருக்கின்றோம். ஆனால் அவ்வாறு மக்களுக்குச் சேவை செய்ய முடியாத அமைச்சர்கள் வீட்டுக்குப் போய் விட வேண்டும்.

அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு தேவையில்லை. மக்களுக்குச் சேவை செய்யாத அந்த அமைச்சர்களை, மக்கள் தான் அடித்துத் துரத்த வேண்டும்.

இந்த நாட்டில் அனைத்து இனங்களுக்கும் சமத்துவம் ஏற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு, அமைச்சர் என்ற வகையில் நான் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றேன்.

இந்த முயற்சிகளுக்கு பல தடைகள் வந்தாலும், இந்த முயற்சிகளை நான் கைவிடப் போவதில்லை. இதில் நாம் தமிழராகவோ, சிங்களவராகவோ அல்லது முஸ்லிமாகவோ எம்மை அடையாளப்படுத்தாமல், இலங்கையராக அடையாளப்படுத்த வேண்டும் என, அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com