Sunday, February 10, 2019

தனமல்வில துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இன்று மதியம் 12.20 மணியளவில் தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். இதன்போது 42 வயதுடைய சுதுஹகுரு சுமித் எனும் வசந்த என்பவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்களினால், இருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த நபர் 4 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com