Tuesday, February 12, 2019

மாதிவெலவில் கைதாகியவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஒரு தொகை ஹெரோயினை எடுத்துச் செல்லும் போது மாதிவெல பிரதேசத்தில் வைத்து பிரபல பாதாள உலக தலைவர்களுள் ஒருவர் என அழைக்கப்படும் அங்கொட லொக்காவுடன் நெருக்கமான தொடர்பை கொண்ட ஒருவர், கைது செய்யப் பட்டுள்ளார்.

39 வயதுடைய ஒருவரே ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த 42.4 கிராம் ஹெரோயினை பொலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com