Tuesday, February 12, 2019

நாடாளுமன்ற உ றுப்பினர் சமிந்த விஜேசிறியின் சாரதிக்கு விளக்கமறியல்

பண்டாரவளையில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த மோதல் ஒன்று தொடர்பில் கைதாகிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் சாரதியை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சாரதிக்கு இடையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மோதல் இடம்பெற்றது. இதன்போது, போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். அத்தோடு அவர் சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதே சமயம் தானும் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவித்து, சமிந்த விஜேசிறியின் சாரதியும் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதாகிய அவர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com