Tuesday, February 19, 2019

ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து குறித்து ஜனாதிபதி நடவடிக்கை ?

அண்மையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இவ்விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 25 பேர் அளவில் கொக்கெயின் போதைப்பொருள் பயன்படுத்துகின்றார்கள் என்ற பகிரங்கமான குற்றச்சாட்டை, ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஆகவே, மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகையதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய வேண்டும். இதனால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பியல் நிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com