Thursday, February 21, 2019

நீதிமன்றம் சென்றது பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதான கொலைச் சூழ்ச்சி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பொலிஸ்மா அதிபரிடம் பெறப்பட்ட குரல்பதிவு மாதிரியின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதற்தடவையாக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனது குரல் பதிவுகளை வழங்க இருந்தார். நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரிலேயே அவர் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

ஊழலுக்கு எதிரான அமைப்பின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார மற்றும் இந்தக் குற்றச்சாட்டு தெடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தொலைபேசி உரையாடல்களை வழங்கி இருந்தனர்.

இந்த குரல் பதிவுகளில் பொலிஸ்மா அதிபரின் குரல் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ்மா அதிபர் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகி குரல்பதிவை வழங்கியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com