Wednesday, February 20, 2019

ரிசார்ட் பதுயூதீனின் பீடி-இலை மோசடி வியாபாரம்! நீதிமன்று அநீதிமன்றாகியது அம்பலம்.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சரான றிசார்ட் பதுயுதீன் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து இந்நாட்டின் சொத்துக்களை சூறையாடுகின்றார் என்றும் அமைச்சு பதவியை கொண்டு தன்னுடைய சட்ட விரோத வியாபாரங்களுக்கு வலுச்சேர்கின்றார் என்றும் பல தரப்பினரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

றிசார்ட் வர்த்தக வாணிபத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர், சுங்கத் திணக்களத்தினருக்கு தண்ணி காட்டி நாட்டுக்கு உரித்தாக வேண்டிய பல பில்லியன் கணக்கான ரூபாய்களை தனது பையினுள் போட்டுக்கொள்கின்றார் என சுங்க திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் நேரடியாக சாடியுள்ளது.

இந்நிலையில் சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ரிசார்ட் பதுயுதீனின் சகா ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், அவ்விடயத்தில் சுங்கத் திணைக்களத்தினரும் எதிர்கட்சியினரும் நீதிமன்றின் செயற்பாட்டை கடுமையாக எதிர்த்தபோது தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு இழிபுகழ் பெற்று நிற்கின்றது கொழும்பு பிரதான மஜிஸ்றேட் நீதிமன்று.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ அல்லவோ ரிசார்ட் பதுயுதீனின் காட்டில் பெருமழை. இலங்கை-இந்திய ஓப்பந்தத்தினூடாக இலங்கை விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்ற வரிச்சலுகைகளை மோசடியான முறையில் பயன்படுத்தி விவசாயிகளை நிர்கதியாக்கியும், இலங்கையின் விவசாய உற்பத்தி பொருட்களின் சந்தை பெறுமதியையும் இல்லாதொழித்து வருகின்றார் ரிசார்ட் பதுயுதீன்.

கடந்த மார்கழி மாதம் 3ம் திகதி இத்தாலிக்கு கொண்டு செல்வதற்கு என இலங்கை இடைத்தங்கல் பகுதிக்குள் நுழைக்கப்பட்ட பிடி-இலை கொள்கலன்கள் வழமையான மோசடி முறையில் இடைத்தங்கல் கொள்கலன் பகுதியிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதை அறிந்த சுங்க அதிகாரிகள் குறித்த கொள்கலன்களை வத்தளைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த 12 தொன் பிடி-இலை மோசடியால் மாத்திரம் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய சுங்கவரி 4 கோடி ரூபா கிடைக்காமல்போனமை வெளியாகியது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரிசார்ட் பதுயுதீனின் உறவினரும் வர்த்தக சகாவுமான நூர்தீன் பசால் அகமெட் என்ற பெயர் கொண்ட நபரே குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்துவந்த பிரதான நபர் என்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து குறித்த நபரை விசாரணைக்காக அழைத்தபோதும் அரசியல் பலம் காரணமாக விசாரணைகளுக்கு முகம்கொடுக்காது அதிகாரிகளை மிரட்டிவந்தார் பாசல்.

மிரட்டலுக்கு பணியாத சுங்க அதிகாரிகள் ரிசார்ட்டின் சகாவான நூர்தீன் பசால் அகமெட் டை கைது செய்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சுங்க மோசடி சட்டவியல்கோவை 127(சி) யின் பிரகாரம் 10 லட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் தொடர்பான சுங்க மோசடி வழக்கொன்றின் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றுக்கே உள்ள நிலையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டமை நீதிமன்று அரசியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது அல்லது அடிபணிந்துள்ளது என்ற குற்றச்சாட்டிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

மேலும் குறித்த மோசடி தொடர்பில் கைதான மூன்று சந்தேக நபர்கள் விளக்க மறியலிலுள்ள நிலையில் பிரதான சந்தேச நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது, மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு குந்தகமாக அமையலாம் என்று சுங்கத்திணைக்களத்தினர் அதிருப்தியை வெளியிட்டனர்.
அத்துடன் எதிர்கட்சியினர் குறித்த நீதிபதி தொடர்பில் சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய தயாராகினர். இதை தொடர்ந்தே கொழும்பு பிரதான மஜிஸ்றேட் நீதிமன்று வழங்கிய பிணையை ரத்து செய்து பாசலை விளக்க மறியலில் அடைத்துள்ளது.

2018 ல் மாத்திரம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து 2800 மெற்றிக்தொன் மிளகினை நாட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இவ்விடத்தில் ரிசார்ட் பதுயுதீனின் சகோதரன் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதது தெரியவந்துள்ளதுடன் மேற்படி மோசடிக்கு வர்த்தக வாணிப அமைச்சின் அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றமை கண்டுபிடிக்கபட்டுள்ளது.

மேற்படி மோசடிக்கு திருமதி சார்ள்ஸ் அவர்கள் இடமளியாத காரணத்தினாலேயே அவரை இடமாற்றுவதற்கு ரிசார்ட் பதுயுதீன் திரைமறைவில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாக சுங்க தொழிலாளர்கள் சங்கம் நேரடியாக குற்றஞ்சுமத்தியிருந்தமை யாவரும் அறிந்தது.

ரிசார்ட் கும்பலின் மோசடி செயற்பாடுகளால் நாட்டுக்கு கடந்த வருடம் மாத்திரம் 1.8 பில்லியன் ரூபாய்கள் நஷ்டமேற்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றது. நாட்டுக்கு கிடைக்கவேண்டிய 1.8 பில்லியன் ரூபாவை ரிசார்த் கும்பல் மாத்திரம் தனது பையினுள் போட்டுக்கொண்டால், ஏனைய அரசியல்வாதிகளால் எவ்வளவு பணம் கொள்ளையிடப்படும் என்பதை கற்பனை செய்கின்றபோது, நாட்டினை கொண்டு செல்வதற்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதையும் வெளிநாட்டு கடன்களை பெறுவதையும் தவிர அரசிற்கு மாற்று வழி யாதுண்டு?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com