Monday, February 25, 2019

வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை இன்னும் கடுமையாக்க எண்ணம்

இலங்கையில் அமுலில் உள்ள கடல் எல்லையை மீறும் வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை இன்னும் கடுமையாக்கவுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக 2 சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதத்தில் மாத்திரம் 7 படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கைப்பற்றப்பட்ட 7 படகுகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களை, அவர்களது நாட்டுக்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வௌிநாட்டு மீனவர்கள் தொடர்பில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தினால், தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com