Monday, February 25, 2019

பேராதனை பல்கலைக்கழகம் இனி மாலைதீவிலும்

மாலைதீவு நாட்டில் இலங்கையின் பேராதனை பல்கலைக்கழக கிளையொன்றை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசாநாயக்க அறிவித்துள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்திடமிருந்து பட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவாகவே மாலைதீவில் கிளை பல்கலைக்கழகத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் பிரகாரம் உரிய ஏற்பாடுகள் குறித்த ஆவணங்கள் பரீசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசாநாயக்க கூறியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com