Wednesday, February 6, 2019

பெருந்தோட்ட தொழிலாளர்களின், சம்பள உயர்வு தொடர்பான தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று, இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், தொழிலாளர் சம்மேளனத்துக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில், தீர்க்கமான பல முடிவுகள் எட்டப்படுமென, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பள விவகாரம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திடம், அரசாங்கத் தரப்புடன் இணைந்து, தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போதும் அது கைகூடவில்லை எனவும், அமைச்சர் மனோ கணேசன்குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான நவீன் திசாநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்தல், தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com