Thursday, February 7, 2019

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரரின் இறுதிக் கிரியையில், ஐ.நா. அதிகாரி பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளின் போது உயிரிழந்த பொலனறுவையை சேர்ந்த இலங்கை வீரரின் இறுதிக்கிரியை, இன்று இடம்பெற்றது.

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடலங்கள், கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. அதனை தொடர்ந்து உடலங்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையே பொலனறுவையை சேர்ந்த இராணுவ வீரரின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது. உயிர் நீத்த வீரரின் இறுதி அஞ்சலி நிகழ்வில், இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், உயிரிழந்த வீரரின் குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த தினம் மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளை மேற்கொண்ட போது, இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பரிதாபமாக பலியாத்துடன், ஆறு பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை, இந்த சம்பவத்திற்கு எதிராக தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com