Thursday, February 7, 2019

ஜனாதிபதி பிரேரணைக்கு எதிராக இருக்கும் நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது - கம்மன்பில

தேசிய அரசாங்க யோசனையை நிறைவேற்றியவுடன் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் என ஐ தே கட்சியில் உள்ளவர்கள் பகல் கனவு காண்கின்றார்கள் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கிண்டல் செய்துள்ளார்.

எதிர்க் கட்சிக் காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைக் கூறினார். இந்த சந்திப்பின்போது புதிய தேசிய அரசாங்கம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கம்மன்பில,

ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு பரிசாக அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிகே இருக்கிறது. அத்துடன், ஜனாதிபதியால் தற்போது உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அதிகாரம் காணப்படுகின்றது.

எனவே, ஜனாதிபதி இந்தப் பிரேரணைக்கு எதிராக இருக்கும் நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு போதும் முடியாது என்று உதய கம்மன்பில இதன்போது திட்டவட்டமாக கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com