Thursday, February 7, 2019

பால்மா தொடர்பிலான உண்மைத்தன்மையை அறிவதற்கு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அறிக்கை கோரல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பால்மா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அறிவதற்கு, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அறிக்கையைக் கோரவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம், பிரதியமைச்சர் புத்திக பத்திரணவினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு மற்றும் மெலமைன் கலக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த கலப்படம் தொடர்பில் ஆராய்வதற்கு எமது நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை செயற்படுகிறது. அதன் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்த பின்னர் அறிக்கை ஒன்றை நாடாளுமன்றம் பெற்றுக்கொள்ளும்.

இந்த அறிக்கை கிடைத்த பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com