Wednesday, February 27, 2019

துஸ்பிரயோக குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த அதிபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குளியாப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.

குறித்த உயர்தர வகுப்பு மாணவியை பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிபர் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக குறித்த மாணவி, பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்தே சம்பந்தப்பட்ட அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com