Wednesday, February 27, 2019

வடக்கில் 248 பாடசாலைகளை மூட நடவடிக்கை

வடக்கில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலைகளில் சுமார் 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவிலேயே மாணவர்கள் கல்வி கற்று வருவதாக வடமாகாண கல்வித் திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது. எனவே குறித்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒன்றில், குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த ஆண்டின் இறுதியில் குறித்த பாடசாலைகள் மூடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாமல் இவ்வாறான பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வடமாகாண கல்வித் திணைக்களம், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, 50 மாணவர்களை விடவும் குறைந்த பாடசாலைகளை பராமரிப்பதற்கு பெருமளவு நிதி செலவிடப்பட்ட போதிலும் அதற்கான கற்பித்தல் பிரதிபலன்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவ்வாறு 50 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை மூடுவது குறித்து இணங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வட மாகாண கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com