Thursday, February 7, 2019

இனப்படுகொலை தொடர்பில், சுயாதீனமான விசாரணைகள் வேண்டும் - மேலும் ஒரு வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேறிய இனப்படுகொலை தொடர்பில், சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று
பார்சிலோனா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பாக ஸ்பெயின் நாட்டின் பிராந்திய அரச கட்டமைப்பிற்குள் ஒன்றான பார்சிலோனாவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பான விடயங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரஸ்தாபிக்கவுள்ள நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயங்கக் கூடாது என்றும், அரசியல் கைதிகளை தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள், இதில் அடங்குகின்றன. அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை விசாரிக்க, சிறப்பு தூதுவரை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்தத் தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றோடு, சுயாட்சி அதிகாரம் மிக்க தமிழ் மக்களுக்கான தேசம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் எனவும் ஸ்பெயின் நாட்டின் பிராந்திய அரச கட்டமைப்பிற்குள் ஒன்றான பார்சிலோனா, மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com