Wednesday, February 6, 2019

புதிய அமைப்பாளர்கள் பலருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கினார்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் பலருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார். இதன் அடிப்படையில், துமிந்த திஸாநாயக்க கலாவெவ தொகுதியின் அமைப்பாளராகவும், ஹொரவ்பொத்தான தொகுதியின் அமைப்பாளராக வீரகுமார திஸாநாயக்கவும், மதவச்சி தொகுதியின் அமைப்பாளராக திஸ்ஸ கரலியத்தவும் தமது நியமனக் கடிதங்களை பெற்று கொண்டனர்.

புத்தளம் மாவட்ட தலைவராக நியமனம் பெற்ற தயாசிறித திசேரா தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இவர்களோடு அனுராதபுரம் மேற்கு, மிஹிந்தலை, அனுராதபுரம் கிழக்கு மற்றும் கெக்கிராவை ஆகிய தொகுதிகளுக்கும் புதிய அமைப்பாளர்கள் தமது நியமனக் கடிதங்களை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெற்று கொண்டனர்.

அநுராதபுரம் மேற்கு தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்ற டபிள்யு.பீ.ஏகநாயக்கவும், மிகிந்தலை தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்ற டபிள்யு.கே.இலங்கசிங்கயும், அநுராதபுரம் கிழக்கு தொகுதிக்கு பேமசிறி ஹெட்டிஆரச்சி மற்றும் டி.பீ.பந்துசேன ஆகியோரும், கெக்கிராவ தொகுதி யின் அமைப்பாளராக நியமனம் பெற்ற ரொஹான் ஜயகொடியும், அனுராதபுர மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்களாக பி.பீ.திசாநாயக்க, எம்.ஹேரத் பண்டா, எம்.ஆர்.பீ.ஞானதிலக ஆகியோரும் தமது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com