Tuesday, February 5, 2019

71 சுதந்திர தினக் கொண்டாட்டத்திலும் வெளிப்பட்டது டபிள் ஏஜென்ட் சிறிதரனின் இரட்டை முகம்.

நேற்று இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாடுபூராகவும் இடம்பெற்றபோது வட பகுதியில் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் சிறிதரனின் சித்து விளையாட்டு சுட்டிக்காட்டப்படவேண்டியதும் கண்டனத்துக்குரியதாகவும் உள்ளது.

கிளிநொச்சியின் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான சிறிதரனின் சகா ஒருவர் நேற்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் 57 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப் பிரிய, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபர் மகிந்த குணரட்ன ஆகியயோரது பிரசன்னத்தில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் கலந்து கொண்டு தேசியக் கொடியின் முன் அணிவகுத்து நின்றார்.



அதே உறுப்பினர் அந்நிகழ்வை முடித்துக்கொண்டு வரும்வழியில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிளிநொச்சியில் நூலக காணியின் எஞ்சிய பகுதியினையும், மத்திய விளையாட்டு மைதானத்தையும் விடுவிக்க கோரியும் இடம்பெற்ற எதிர்ப்பார்பாட்டத்திலும் கலந்து கொண்டு சுலோகம் ஒன்றை பிடித்துக்கொண்டு நின்றார்.



அரசிற்கும் அதன் அதிகாரிகளுக்கும் தங்களை விசுவாசிகளாக காட்டிக்கொள்ளும் சிறிதரனும் அவனது சகாக்களும் மக்களை எவ்வாறு ஏமாற்றுக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் மாத்திரமே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com