Thursday, February 14, 2019

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தி, வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கத்தினர், இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தை பகுதியில் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரி, பதாகைகளை ஏந்தியதுடன், போராட்டக்காரர்கள் சத்தமாக கோஷங்களையும் எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம், பேரணியாக பலாலி வீதியூடாக பரமேஸ்வர சந்திவரைச் சென்று, அங்கிருந்து இராமநாதன் வீதியூடாக யாழ்.பல்கலைக்கழக வாயிலை அடைந்தது.

பல்கலைக்கழக வாயிலிலும் சில நிமிடங்கள் போராட்டக்காரர்கள், தமது போராட்டத்தினை முன்னெடுத்து, பின்னர் அங்கிருந்து களைந்து சென்றனர்.

யாழில் பதின்ம வயது சிறுமிகள் மீது, பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள், திகரித்துள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com