Thursday, February 14, 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில், இலங்கையும் இணைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

பண மோசடி மற்றும் எதிர்ப்பு பயங்கரவாத நிதி கட்டமைப்பின் மூலோபாய குறைபாடுகளை கொண்ட சுமார் 23 நாடுகளின் கறுப்பு பட்டியல், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து ஒவ்வொரு நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தங்களது குறைபாடுகளை விரைவாக நிவர்த்திப்பதற்கு, தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்த கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை, ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com