Thursday, February 14, 2019

ஜனாதிபதி தலைமையில் விசேட மாநாடு இன்று

சுற்றாடல் பாதுகாப்புச் செயற்றிட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் அநுராதபுர மாவட்ட மக்கள் முகம்கொடுக்கும் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக அவர்கள் முகம் கொடுத்து வரும் காட்டுயானை பிரச்சினை தொடர்பிலும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ள அதேநேரம், கழிவகற்றல் தொடர்பில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள், நீர் முகாமைத்துவம் மற்றும் வன பரிபாலனம் ஆகியவற்றில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இம் மாநாட்டில் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், அவர்களினூடாக சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com