Tuesday, February 26, 2019

நீதிமன்ற அனுமதியுடன் முள்ளியவளை வெடி பொருள் அகற்றப்படும்

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹீச்சிராபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருள் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. தனியார் காணியில் குறித்த வெடி பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணி உரிமையாளர் தனது காணியில் வெடிபொருள் இருப்பதை முள்ளியவளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த தகவலின் பிரகாரம், பொலிஸார் குறித்த வெடிபொருளை பார்வையிட்டு இன்று நீதிமன்றில் அனுமதி கிடைத்ததும் அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் அவ்வப்பொழுது வெடிபொருட்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்ற
ன . எவ்வாறான போதிலும் வெடிப்பொருள்கள் அகற்றிய பின்னர் மக்களை குடியேற்றிய நிலையில், தொடர்ச்சியாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com