Tuesday, February 26, 2019

ஊடகவியலாளர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பேன் - புதிய ஊடகத்துறை அமைச்சர்

ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு ஊடகவியலாளர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு என, புதிய ஊடகத்துறை அமைச்சரான ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே புதிய ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டார்.

ஊடகத்துறையை சிறந்த தொழிற் துறையாக கட்டியெழுப்புவதற்கு தான் ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமாகச் செயற்படுவேன் என்றும் அமைச்சர் கூறினார். அத்துடன் ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சேவை ஆற்றுவேன் என்றும் ஊடகத்துறை அமைச்சரான ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com