Tuesday, February 26, 2019

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கொழும்பு பேரூந்து விபத்து - 2 பலி - பலர் படுகாயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று இரவு பயணித்த சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.

இந்த விபத்து முல்லைத்தீவு- மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ9 வீதியில், இன்று அதிகாலை 4 மணி அளவில் நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

யாழ் நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற கல் ஏற்றிய டிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளாகிய பேரூந்து அதி வேகமாக பயணித்தமையே விபத்திற்கான காரணம் என்றும் தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com