Monday, February 18, 2019

இராணுவமோ, புலிகளோ தவறிழைத்துள்ளதை தேடிக்கொண்டிருப்பது, அர்த்தமற்றது - திலங்க சுமதிபால

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இலங்கை இராணுவமோ, தமிழீழ விடுதலை புலிகளோ தவறிழைத்துள்ளதை தேடிக் கொண்டிருக்காமல், நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்று, பல வருடங்கள் உருண்டோடி விட்டன.
இந்த நிலையில் பேசியத்தையே, மீண்டும் மீண்டும் பேசி, இந்த நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்துவது சிறந்ததல்ல என்றும் அவர் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் கிளிநொச்சியில் வைத்து ஆற்றிய உரையில், தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது இடம்பெற்ற இரு தரப்பு தவறுகளையும் மறந்து மன்னித்து முன்னோக்கி செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த கருத்து தொடர்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலை புலிகளோ தவறிழைத்தது என்பதைத் தேடிக் கொண்டிருக்காமல், எங்கு தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என, அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com