Monday, February 18, 2019

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக, 48 மில்லியன் டொலர்கள் கடனுதவி.

இந்தியாவிடம் இருந்து கடன் அடிப்படையில், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 48 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்துக்காக ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் வகையில், இந்திய அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக, இலங்கையின் அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு இரண்டாயிரத்து 600 மீற்றர் விமான ஓடுபாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழு, இலங்கை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகு விரைவில் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான அடுத்த கட்ட கடனை வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com