Wednesday, February 20, 2019

முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றிணைந்து, இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மட்டக்களப்பு நகர, முச்சக்கர வண்டி சாரதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்தினால், இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக நடைபெற்றது.

கடந்த 30 வருடங்களாக, மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரி சங்கம் செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதன் செயற்பாட்டினை குழப்பும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரும், ஆணையாளரும் செயற்படுவதாக, குறித்த சங்கத்தின் தலைவர் எஸ்.ஜேசுதாசன் தெரிவித்தார். அத்துடன் தமது பணிகளுக்கு இடையூறு விளைவித்தால், அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஆதரவாக, பொது மக்களும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com