Wednesday, February 20, 2019

பிழையான வரிக் கொள்கையால், நாட்டில் மதுபானம், புகையிலை பொருட்களின் பாவனை அதிகரிப்பு.

தற்போதைய அரசாங்கத்தின் பிழையான வரிக் கொள்கை காரணமாக, கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018 ஆம் ஆண்டில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை எடிக் என்ற , மது மற்றும் போதை பொருள் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச் சலுகை காரணமாக, கடந்த வருடத்தில் ஒட்டுமொத்த ஆண்களில், 33 வீதமானோர் மதுபானம் அருந்தியுள்ளனர். அத்துடன் 26 வீதமானோர் புகைத்தலில் ஈடுபட்டுள்ளதாக, மது மற்றும் போதை பொருள் தடுப்பு நிலையத்தின் செயற்பாட்டு அதிகாரி அசித தர்ஷன குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை பாதாளத்திற்குள் தள்ளும், போதைப் பொருள், மதுபானம், புகையிலை பொருட்களின் பாவனை அதிகரித்திருப்பது, நாட்டு மக்களுக்கு பெரும் ஆபத்தாகும் என அவர் கூறினார்.

அத்துடன் பிழையான வரிக்கொள்கைகளை நீக்கி விட்டு, நாட்டுக்கு தேவையான வரிக்கொள்கைகளை பேணி, நாட்டு மக்களை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என, மது மற்றும் போதை பொருள் தடுப்பு நிலையத்தின் செயற்பாட்டு அதிகாரி அசித தர்ஷன கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com