Saturday, February 16, 2019

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளார்கள். 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடவென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி திறைசேரி, நிதியமைச்சு என்பனவற்றின் அதிகாரிகளுடன் குறித்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.
உலக வங்கியின் 5ஆவது தவணைக் கொடுப்பனவு கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட இருந்தது.

அரசியல் நெருக்கடியினால் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com