Saturday, February 16, 2019

வவுனதீவில் கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு அரச துறையில் தொழில்

வவுனதீவில் கடமையிலிருந்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கனேஷ் தினேஷின் மூத்த சகோதரிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நூலக உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தெஹியத்தகண்டிய, நுவரகல மகா வித்தியாலய விளையாட்டரங்கில் இடம்பெற்ற மகாவலி காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மகாவலி விவசாய பாராட்டு, பரிசளிப்பு விழாவில் வைத்து இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி, மட்டக்களப்பு வவுனதீவில் கடமையில் இருந்த போது கொலைசெய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் அதிகாரி இந்திக்க பிரசன்னவின் குடும்ப நலன்பேணலுக்காகவும் ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com