Saturday, February 2, 2019

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ணக் குறியீடு.

கடந்த காலங்களில் குளிர்பானங்களுக்கு வர்ண குறியீடு பயன்படுத்தப்பட்டமை போன்று நேற்று முதல் திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறையை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மென் பானங்களில் சீனியின் அளவை அறிந்துகொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ணக் குறியீட்டு முறையை சுகாதார அமைச்சு திண்ம உணவுப் பொருட்களுக்கும் அறிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மென்பான வகைகளுக்கு இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

சீனி, உப்பு, எண்ணெய் செறிந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் மக்கள் தொற்றா நோய்களுக்கு ஆளாகும் நிலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சு, அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இதன்படி, ஆகக் கூடுதலான சீனி அடங்கியுள்ள உணவுப் பொருட்களுக்கு சிவப்பு நிறக் குறியீடு இடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உணவுச் சட்டத்திற்கு அமைய, இந்த வர்ணக் குறியீட்டு முறை, திண்ம உணவுப் பொருட்களுக்கும் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com