Wednesday, February 13, 2019

குற்றங்களின் இரகசியத்தன்மையை அறிவதற்காக, விசேட மென்பொருள் அறிமுகம்.

குற்றங்களின் இரகசியத் தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில், விசேட மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய குற்றங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள், குற்றவாளிகளின் செயற்பாடுகளை இனங்கண்டு கொள்ளவும், குற்றங்கள் இடம்பெறும் கால நேரங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலும், இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் காவல்துறை நிலையங்களையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, காவல்துறைகளின் செயற்பாட்டிலுள்ள VPN வலையமைப்பிற்குள் இந்த மென்பொருளை இணைத்துள்ளதாகவும், இதன்படி குற்றம் இடம்பெற்ற இடத்தை Google வரைபடத்தினூடாக கண்டறிந்து அதனூடாக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும், இலங்கை காவல்துறையும் இணைந்து, இந்த இரகசிய தகவல் மென்பொளை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com