Wednesday, February 13, 2019

பாதாள குழுவினரும், அரசியல்வாதிகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாவர் - புத்திக பத்திரண!

பாதாள உலக குழுவினரும், இலங்கையின் அரசியல்வாதிகளும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்று மாறியுள்ளதாக, பிரதியமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 35 வருடங்களுக்குள் அரசியல்வாதிகளுக்கும், பாதாள உலக குழுவினருக்கும் இடையிலான உறவு பாரியளவில் அதிகரித்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மனசாட்சிக்கு விரோதமின்றி மக்களுக்காக மாத்திரமே, சேவை புரிந்திருந்தால், பாதாள குழு உறுப்பினர்களுக்கு துணைபோயிருக்க மாட்டார்கள்.

பாதாள உலக் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாகந்துர மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும், இலங்கை அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக, பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்ட போதே, பிரதியமைச்சர் புத்திக பத்திரண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com