Tuesday, February 5, 2019

தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, சிங்கள தலைமைகள் தேவை – அருண் தம்பிமுத்து.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட பல முதன்மை விடயங்களை, சிங்கள தலைமைகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

சுய நிர்ணய உரிமை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார். ஒரு சிங்கள தலைமைத்துவம் வந்தால் தான் தமிழர்கள் பல விதமாக ஆதரவினை பெற முடியும். அத்துடன் தமிழர்கள் தங்களது தேவைகளை பெற்றுக்கொள்ள, வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படும் தமிழர்களின் செயற்பாடுகள் அதிகரிக்க வேண்டும். அதற்கு சிங்கள தலைமைத்துவத்தின் பங்களிப்பு கட்டாயமாக தேவை என்பதை, தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அருண் தம்பிமுத்து இதன்போது குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com