Tuesday, February 5, 2019

மீண்டும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சுங்க திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளராக நியமனம்.

சுங்க திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளராக, பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.எம். சார்ள்ஸை, அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கடந்த வாரம் முடிவெடுத்ததை, அமைச்சரவை மீள பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு, 1 வருட காலம் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவருடைய 3 மாத சேவையை பொறுத்து, அவர் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய பி.எஸ்.எம்.சார்ள்ஸ், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க திணைக்களத்தினர் இணைந்து பாரிய தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அவரை மீண்டும் நியமிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com