Friday, February 8, 2019

நாய் கவ்விச் சென்ற மனித தலை, மீட்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் தீவிரம் - காவல்துறையினர்.

பேலியகொடை பகுதியில் நாய் ஒன்று கவ்விச் சென்ற மனித தலை மீட்கப்பட்டதை அடுத்து, அது குறித்து இடம்பெற்ற விசேட விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது, கடந்த தினம் பேலியகொட பகுதியில், நாய் ஒன்று மனித தலையை கவ்விச் செல்வதாக, பிரதேசவாசிகள் காவல்துறைக்கு அறிவித்திருந்தனர்.

தகவல் அறிந்த அப்பகுதி காவல்துறையினர், அண்மையில் வெளிநாட்டு பிரஜைகளின் சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.

கடந்த வருடன் டிசம்பர் மாதம், கொழும்பில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் தங்கியிருந்த, வெளிநாட்டு ஜோடிகளின் சாரதி, அந்த வீட்டின் அறையினுள் மர்மமான முறையில் உயரிழந்திருந்தார்.

கதிரையொன்றில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டிருந்த அவரது சடலம் தொடர்பில், அந்த வெளிநாட்டு ஜோடி, இலங்கை காவல்துறையினருக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மொரட்டுவை பகுதியில் நபரொருவர், கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல், காணாமல் போயிருந்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, அவரே இந்த வெளிநாட்டு ஜோடிக்கு சாரதியாக கடமையாற்றியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கமைய மீட்கப்பட்டுள்ள மனித தலை, குறித்த நபருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அதனை உறுதி செய்வதற்காக, மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com