Wednesday, February 27, 2019

அமைச்சர்களின் போதைப்பொருள் பாவனை குறித்த விசாரணை அறிக்கை, செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பு

இலங்கையிலுள்ள அமைச்சர்கள் சிலர், கொக்கெய்ன் போதைப் பொருளை பயன்படுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்தை அடுத்து இது குறித்து விசாரிப்பதற்கான நாடாளுமன்றத்தில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை, செயற்குழு கூட்டத்தில் வைத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை குழுவின் தலைவரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்றது.

இந்த கூட்டம் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்பெற்றது. இதன்போதே குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கவினால் வழங்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்றை மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் கலந்துரையாப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com