Wednesday, February 6, 2019

புதிதாக உருவாகும் தேசிய அரசாங்கம் சட்டவிரோதமானது - தயாசிறி ஜயசேகர

தமது சுயநலத்திற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐ.தே.கட்சி விருப்பம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஸ்ரீ.சு.கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

புதிய தேசிய அரசாங்கம் தோற்றம் பெறுமாக இருந்தால் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரிக்கும். அதிகரிக்கப்படும் அமைச்சர்களுக்கும் சம்பளம், வாகனம் மற்றும் சலுகைகள் என்பனவற்றை வழங்க நேரிடும்போது, மக்களுக்கு சுமையாக அமையும்.

முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில் தோற்றம் பெறும் தேசிய அரசாங்கம் செல்லுபடியற்றதாகும். புதிதாக உருவாகும் தேசிய அரசாங்கம் சட்டவிரோதமானது. அதை ஒரு போலியான நடவடிக்கை என்றே நாம் பார்க்கின்றோம். எனவே இதனை அங்கீகரிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் இதைத் தோற்கடிப்பது குறித்து எமது கட்சி உறுப்பினர்களிடையே கலந்துரையாடி வருகின்றோம் என்று, தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com