Wednesday, February 6, 2019

கடவுச்சீட்டுக்களை (Passport ) பெற்றுக்கொள்ள, கொழும்பிற்கு செல்லும் அவசியம் இனி இல்லை

கடவுச்சீட்டுக்களை எதிர்வரும் ஜூன் மாதம் முதல், மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்குடன் மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கிளைக் காரியாலயங்களை அமைத்து, ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதன் மூலம், கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்றே, தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். சுமார் 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள், ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்பிற்கு செல்லவேண்டிய சிரமத்தை தவிர்க்கும் நோக்கிலேயே, இந்த வேலைத்திட்டத்தை ஆட்பதிவுத் திணைக்களம் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com