Tuesday, February 5, 2019

கிளிநொச்சியில் படைப்புழு தொடர்பாக ஆராயும், விசேட கூட்டம்.

விவசாயயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள படைப்புழுவின் தாக்கம் தொடர்பாக, கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த கூட்டம் இன்று பிற்பகல் மாலை 3 மணியளவில் ஆரம்பமாகியது.

இதன்போது படைப்புழுவை கட்டுப்படுத்தல், மற்றும் அதன் தாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்களங்கள் சார் அதிகாரிகள், விவசாயிகள், பொலிஸார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தீவிரமாகப் பரவி வரும் படைப்புழுவின் தாக்கம் குறித்து, அண்மைக் காலமாக மக்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் இந்த படைப்புழுவை ஒழிப்பதற்கான மருந்தை விரைவில் பெற்றுத்தர, நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரைக் காலமும் சோளப்பயிர்ச்செய்கையை பாதித்திருந்த படைப்புழு, தற்போது வாழை, குரக்கன் உள்ளிட்ட ஏனைய பயிர்செய்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நட்டஈட்டை தாம் வழங்குவதாக, விவசாய அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com