Monday, February 18, 2019

பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரிக்க, மேலுமொரு நீதிமன்றம்

புதுக்கடை நீதிமன்ற மண்டப இலக்கம் 01 இல், பாரிய லஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் இரண்டாவது விசேட நீதிமன்றத்தை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதிமன்ற சேவை அமைப்பின் சட்டத்தின் கீழ் நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த நீதிமன்றம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com