Tuesday, February 12, 2019

அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு புதிய குழு

அரச ஊடகங்களை மேலும் மக்கள் சேவை ஊடகங்களாக மாற்றுவதற்கு நிதி மற்றும் ஊடக அமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஏழு பேர் அங்க த்துவப்படுத்தும் இந்த குழுவில் ஐநாவின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் ஆலோசகராக பணி புரிந்த விஜயானந்த ஜயவீர குழுவின் தலைவராகவும், பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி பிரதீப் வீரசிங்ஹ, பிரபல ஊடகவியலாளர் நாலக குணவர்த்தன, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கௌசல்யா பெர்னாண்டோ, அனோமா ராஜகருணா, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.

இன்று சமூகத்தில் ஊடகப் பயன்பாடு, அவற்றின் சுதந்திரம் தொடர்பில் சமூக கருத்தாடல் தீவிரம் பெற்ற நிலையில் தனியார் ஊடகங்களை ஒழுங்குறுத்துவதற்கு முன்னர், அரச ஊடகங்களை மெய்யான மக்கள் சேவையாக மாற்ற வேண்டும் என்பது ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com