Tuesday, February 12, 2019

2 மில்லியன் ரூபா செலவில் முதியோர் இல்லங்களை அபிவிருத்தி செய்ய திட்டம் - சமூக வலுவூட்டல் அமைச்சர்

போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக தொழில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற வாசனைத் திரவிய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் சபை, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தேசிய சபை சமூக பாதுகாப்புச் சபை, சமுர்த்தி சமூக அடித்தள வங்கிகள், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் கிராமிய மட்டத்தில் இருந்து அமுலாக்கப்படும். சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

இவை தவிர, இரண்டு மில்லியன் ரூபா செலவில் முதியோர் இல்லங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தயா கமகே இந்த சந்திப்பில் தெரிவித்தார். நாடெங்கிலுமுள்ள முதியோர் இல்லங்களுக்கு தலா இரண்டு மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த யோசனையை முதியோர் கட்டுப்பாட்டுச் சபையும் அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com